"இந்தியாவிற்கு அடுத்த வாரம் முதல் மீண்டும் விமான சேவை"- நேபாள அரசு

0 1139
"இந்தியாவிற்கு அடுத்த வாரம் முதல் மீண்டும் விமான சேவை"- நேபாள அரசு

இந்தியாவிற்கான விமான சேவை கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் அடுத்த வாரம் தொடங்கும் என, நேபாள அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு விமான போக்குவரத்து துறை இணைச் செயலாளர் புத்தி சாகர் லாமிச்சேன், இருநாடுகளுக்கு இடையே 9 மாதங்களுக்குப் பிறகு விமான சேவையை தொடங்குவதற்கான, இந்தியாவின் முயற்சிக்கு விரைவில் சாதகமான பதிலளிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து, 10 நாட்களுக்குள் தேதி இறுதி செய்யப்பட்டு, இருநாடுகளுக்கு இடையேயான விமான சேவை தொடங்கப்படும் என, லாமிச்சேன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments